கலஹாவில் போலி மருத்துவர் கைது

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவின் கலஹா தோட்டத்தில் போலி மருத்துவர் ஒருவர் கம்பளை விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னை மருத்துவராக காட்டிக்கொண்ட இந்த நபர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

கலஹா பிரதேசத்தல் வன்சொட் என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் இந்த நபர் நீண்டகாலமாக மருத்துவர் போல் செயற்பட்டு வந்துள்ளார்.

சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments