தங்காலையில் வங்கி கொள்ளை

தங்காலை, குடாவெல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில் புகுந்து, 50-60 இலட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(05) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இதன்போது சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Comments