கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டோமா?


காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் இழப்­பு­களை மதிப்­பீடு செய்து நஷ்­ட­யீட்டை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தாம­த­மா­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பாதிப்­புகள் சம்­பந்­த­மாக இது­வரை பொலிஸ் முறைப்­பா­டுகள் மாத்­தி­ரமே பொது மக்­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. மாறாக நஷ்­ட­யீட்டை வழங்கும் வகை­யி­லான மதிப்­பீட்டு பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. சம்­பவம் நடந்து மூன்று வாரங்கள் தாண்­டி­விட்ட போதிலும் இது­வரை கிராம சேவகர் தமது வீடு­களின் பாதிப்­பு­களை பார்­வை­யி­டவோ சேதங்­களை மதிப்­பி­டவோ வருகை தர­வில்லை என மக்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்கள் வேறு அலு­வல்­களில் ஈடு­பட்­டுள்­ளதால் அவர்­களைக் கொண்டு மதிப்­பீ­டு­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­ள­தா­கவும் அவர்­க­ளது பிர­சன்­ன­மின்றி தம்மால் மதிப்­பீடு செய்ய முடி­யாது என்றும் கிராம சேவ­கர்கள் காரணம் கூறு­கின்­றனர். இந் நிலையில் தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களை அழைத்­து­வந்து நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான பணி­களை துர­திப்­ப­டுத்த வேண்­டி­யது முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் கடப்­பா­டாகும்.

சம்­பவம் நடை­பெற்­ற­வுடன் நாங்­கள்தான் முதலில் சென்றோம் என ஆளுக்காள் மார்­தட்­டு­வதை விட பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதே அர­சியல் தலை­மை­களின் கடப்­பா­டாகும்.

தற்­போது உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மும்­மு­ர­மாக இருப்­பதால் கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டார்கள் என்­பதே நிதர்­ச­ன­மாகும். எனினும் தேர்­தல்­களை காரணம் காட்டி இந்த வன்­மு­றை­களால் மிகக் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்ள அப்­பாவி மக்­க­ளுக்கு நஷ்­ட­யீட்டைப் பெற்றுக் கொடுக்கும் கடப்­பாட்­டி­லி­ருந்து எவரும் தப்­பி­விட முடி­யாது.

என­வேதான் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இது­வி­ட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யிட்டு தொழில்­நுட்ப அலு­வர்­க­ளையும் கிராம சேவ­கர்­க­ளையும் பயன்­ப­டுத்தி இழப்­பீ­டு­களை மதிப்­பீடு செய்­யவும் அதற்­கான நஷ்­ட­யீ­டு­களைப் பெற்றுக் கொடுக்­கவும் முன்­வர வேண்டும்.

பொது­வாக அரச இயந்­திரம் இவ்­வா­றான விட­யங்­களில் மெத்­தனப் போக்கை கடைப்­பி­டிப்­பது வழக்­க­மாகும். எனினும் கிந்­தோட்டை விட­யத்தில் பிர­தமர் நேரில் சென்று உத்­த­ர­விட்டும் நஷ்­ட­யீடு வழங்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மா­கு­வ­தாயின் இதன் பின்­ன­ணியில் ஏதேனும் அர­சியல் அழுத்­தங்கள் உள்­ள­னவா எனும் சந்­தே­கமும் எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் அளுத்­கம வன்­மு­றைகள் இடம்­பெற்ற பின்னர் இரா­ணுவ வீரர்­களின் உத­வி­யுடன் பாதிப்­புகள் சீர்­செய்­யப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள், வீடுகள் என்­பன முழு­மை­யாக பூர­ணப்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டன. எனினும் அளுத்­கம சம்­ப­வத்தைப் பிர­சா­ரப்­ப­டுத்தி முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்­கத்தின் காலத்தில் கிந்­தோட்டை சம்­பவம் நடந்­தமை ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். அதிலும் நஷ்டயீடு வழங்குவதில் கூட தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது மிகவும் கவலை தருவதாகும்.

எனவேதான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தங்களை வழங்கி பாதிக்கப்பட்ட கிந்தோட்டை மக்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

Comments