மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளுக்கான அச்சுறுத்தல் வழக்கில் அவர் ஏற்கெனவே ஒரு வருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு மேன்முறையீட்டில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.

Comments