முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் இன்னுமா தெளிவில்லை

ஏ.ஜே.எம்.நிழாம்
முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் மனித உரிமை மீறலும் பெண்­ணு­ரிமை மறுப்பும் இருக்­கின்­றன என முஸ்­லி­மல்­லாதோர் கூறு­வார்­க­ளாயின் முஸ்­லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவ்­வா­றில்லை என ஆதா­ரங்­க­ளுடன் விளக்க வேண்டும். இல்­லா­விட்டால் சலாம் கூறி ஒதுங்­கி­விட வேண்டும். கையை விரிக்க வேண்டும் பொத்­திக்­கொண்­டி­ருப்­பது பதி­லா­காது.
தஃவத் என்­பது முஸ்­லிம்­களை மட்டும் அழைப்­பதும் விளக்கம் கூறு­வதும் மட்­டு­மல்ல சர்­வ­தே­சத்­தையும் இதன் பால் ஈர்க்க வேண்டும். அதற்­கொரு அரிய சந்­தர்ப்­ப­மா­கவே முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தைக் கையாள வேண்டும். இதை ஆலிம்கள் வித்­துவ செருக்­கோடு மூடி மழுப்பித் தவ­ற­வி­டு­வார்­க­ளாயின் முழு­மை­யான தஃவத்தை நிறை­வேற்­றி­ய­வர்­க­ளாக அவர்கள்  ஆக­மாட்­டார்கள்.
ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே அரசு ஐரோப்­பிய கிறிஸ்­தவ நாடு­க­ளிடம் இஸ்­லாத்தின் அந்­தஸ்தைத் தாரை வார்த்து முஸ்லிம் தனியார் சட்­டத்தைத் திருத்தப் பார்க்­கி­றது எனச் சில ஆலிம்கள் பூச்­சாண்டி காட்­டி­ய­தா­லேயே முஸ்­லிம்கள் இதற்கு எதி­ரான மன நிலை­யை கொண்­டி­ருந்­தார்கள் என்­ப­தை­யாரும் மறைக்கக் கூடாது.
குருத்­துவம் இஸ்­லாத்தில் இல்லை. ஆபாக்கள் எனும் மூதா­தை­ய­ரையும் பின்­பற்ற முடி­யாது இது தெரி­யா­மல்தான் உல­மாக்­களை மீறி 21 முஸ்லிம் எம்.பி. க்களாலும் போக முடி­யாது போயிற்று. அத­னால்தான் தான் உலமா சபை­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் 6 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்­டுமே கலந்­து­கொண்­ட­போது நமது மூதா­தை­யரின் வழி­யி­லி­ருந்து எம்மால் மாற முடி­யாது என அவர்­களும் ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ரிஸ்வி முப்தி 21 முஸ்லிம் எம்.பி. க்களை இதற்­காக நிய­மிக்க வேண்டும் என்றார். எனினும் 15 பேர் கலந்து கொள்­ள­வில்லை கலந்து கொண்ட 6 பேர் கூறிய கருத்தும் ரிஸ்வி முப்­திக்கு சார்­பா­கவே இருக்­கி­றது. இப்­போது  மூன்று சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் இப்­பொ­றுப்பைக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். பாயிஸ் முஸ்­த­பா­வையும் ஷிப்லி அஸீ­ஸையும் சலீம் மர்சூபுடன் சேர்த்­து­விட்­டி­ருக்­கி­றார்கள். பாயிஸ் முஸ்­த­பாவும் ஷிப்லி அஸீஸும் ரிஸ்வி முப்­திக்கு சார்­பா­ன­வர்கள் சலீம் மர்சூப் தனித்து விடப் பட்­டி­ருக்­கிறார்.
இன்­னு­மொரு திட்­டத்­தையும் இவர்கள் நீதி­ய­மைச்­சிடம் வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதா­வது முஸ்லிம் விவாக  விவா­க­ரத்துச் சட்டம் குறித்து முஸ்லிம் பொது மக்­களிடம் அபிப்­பி­ராயம் கோர வேண்­டுமாம். முஸ்லிம் பொது மக்­களில் 75% வீத­மா­னோ­ருக்கு இந்த சட்டம் என்ன என்­பது பற்றி அறவே தெரி­யாது. இது பற்றி 1951 ஆம் ஆண்டு வரை இது பற்றி தெளி­வு­ப­டுத்­தி­யதே இல்லை. மிகுதி 25% வீத­மா­னோரும் கூட பல்­வேறு தஃவத் அமைப்­பு­க­ளா­கவும் தரீக்­காக்­க­ளாகவும் பிரிந்து நிற்­கி­றார்கள். எனவே இது மேலும் சிக்­க­லையே தோற்­று­வித்­து­விடும்.
2009 ஆம் ஆண்டு அர­சி­ட­மி­ருந்து பொறுப்­பேற்று முஸ்லிம் தனியார் சட்­டத்­துக்­காக விவாக மற்றும் விவா­க­ரத்து விட­யங்­க­ளுக்­கென 9 வருட காலம் சிர­மப்­பட்­டு­ழைத்த முன்னாள் நீதி­ய­ரசர் சலீம்மர் சூபைக் கேளாமல் நீதி­ய­மைச்சு ஏன் ரிஸ்வி முப்­திக்கு சார்­பான அறிக்­கையை இணை­யத்­த­ளத்தில் பதி­வேற்­றி­யது?  இவ் விட­யத்தில் ஆலிம்­களை மீறத் தக்க விளக்கம் நீதி­ய­மைச்­சிடம் இல்­லா­த­தே­யாகும்.
இது இஸ்­லா­மிய விளக்க விடயம் இதில் தீர்வு பெற நீண்­ட­காலம் கழிந்­தி­ருப்­ப­தாலும் இழு­பறி நிலை தொடர்வ­தாலும் ஆலிம்­க­ளிடம் கொடுத்து விடு­வதே இல­கு­வழி என நீதி­ய­மைச்சு நினைத்­தி­ருக்­கலாம். எனினும் இலங்­கையின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் மனித உரிமை மீறல் பெண்­ணு­ரிமை மறுப்பு என்­றெல்­லாம் சர்­வ­தேசம் சுட்­டிக்­காட்­டு­கி­றது.
இது முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே உரிய விடயம். இதில் முஸ்­லி­மல்­லாதோர் தலை­யிடக் கூடாது. அப்­படிச் செய்­வது எமது மத உரி­மையை மீறு­வ­தாகும். முஸ்லிம் சட்­டத்தில் கைவைக்க சர்­வ­தே­சத்­துக்கு உரி­மை­யில்லை. ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் வாழும் கிறிஸ்­த­வர்கள் இஸ்­லாத்தில் கைவைக்­கி­றார்கள் என்­றெல்லாம் பரப்­பு­ரையை காலத்­துக்குக் காலம் உல­மாக்களில் சிலர் செய்தே காலம் விர­ய­மா­கி­யது.
ஆக 21 முஸ்லிம் ஆண் எம்.பி. க்களும் உலமா சபையின் பத்வாக் குழு­வோடு உடன்­பட்ட பிறகு தானா நீதி­ய­மைச்சு தனது இணையத் தளத்தில் ரிஸ்வி முப்­தியின் சிபா­ரிசு அறிக்­கையைப் பதி­வேற்­றி­யது? முஸ்லிம் விவாக விவா­கரத்து விட­யங்கள் இஸ்லாம் சம்­பந்­தப்­பட்­டவை என்­ப­தா­லேயே உலமா சபை இவ்­வி­ட­யத்தில் முன்­னிலைப் படுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என நினைக்­கிறேன்.
எனினும் மேற்­கூ­றப்­பட்ட மூன்று விடங்­க­ளிலும் தமக்கு சமூக நீதி கிடைக்க­வில்லை என்றே முஸ்லிம் பெண்கள் குறிப்­பி­டு­கி­றார்கள். 1951 ஆம் ஆண்டு விவாக விவா­க­ரத்­துச சட்டம் இயற்­றப்­படும் போது இவை பற்றி எந்த முஸ்லிம் பெண்ணும் ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. காரணம் அப்­போது பெண் கல்வி போதிய அளவு வழங்கப் பட்­டி­ருக்­க­வில்லை. இப்­போது கல்­வியில் முன்­னே­றி­யிருக்கிறார்கள். அதனால் தான் இஸ்­லாத்தின் பெயரால் தாம் ஆணா­திக்­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக உணர்­கி­றார்கள். இவர்கள் எழுப்பும் பெண்­ணு­ரிமைக் குரலை நோக்கி உலக குரலும் திரும்­பி­யி­ருக்­கி­றது. இந்த சூழலில் 1951 ஆம் ஆண்டு ஆராய்ச்­சியின் நிலைப்­பாட்­டி­லேயே முஸ்லிம் அறி­ஞர்கள் விடாப்­பி­டி­யாக நிற்க முடி­யாது. நூற்­றுக்­க­ணக்­கான சன்­மார்க்கக் கூடங்கள் இருந்தும் ஆயி­ரக்­க­ணக்­கான சன்­மார்க்க அறி­ஞர்கள் இருந்தும் பாடத் திட்­டத்தில் மாற்றம் இல்லை.
சலீம் மர்­சூ­போடு நிய­மிக்­கப்­ப­ட்டி­ருக்கும் பாயிஸ் முஸ்­தபா மட்­டு­மல்ல ஷிப்லி அஸீஸும் உலமா சபைக்கு சார்­பா­ன­வரே ஆகவே சட்­டத்­த­ர­ணி­களை மட்­டுமே கொண்ட விசேட குழு­வி­டமே இப்­பொ­றுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. உல­மா­ச­பையின் பத்வா குழு இடம்­பெ­றா­விட்­டாலும் அதற்குச் சார்­பான இரு சட்­டத்­த­ர­ணிகள் இடம் பெற்­றி­ருக்­கி­றார்கள். சலீம் மர்­சூபின் முன்­னி­லை­யி­லேயே கலந்­து­ரை­யா­டப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே சலீம் மர்­சூபும் அழைக்­கப்­பட்­ட­தாக ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அப்­ப­டி­யானால் இது சலீம் மர்­சூ­பையும் இணங்க வைக்கும் முயற்­சி­யாக நிகழ்ந்­ததா?
உலமா சபையின் சார்பில் தலைவர் ரிஸ்வி முப்தி, செய­லாளர் முபாரக் மௌலவி, உதவித் தலைவர்  தாஸிம் மௌலவி, பாஸில் பாரூக் மௌலவி, அர்க்கம் நூராமித் மௌலவி, முர்ஷித் முழப்பர் மௌலவி ஆகியோர் கலந்து கொண்­டார்­கள். இவர்கள் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தோடு முன்னோர் தயா­ரித்­துள்­ளதில் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்ட சில திருத்­தங்­க­ளையே செய்­யலாம் என்­ற­னராம்.
முடிவில் மூவர் குழு கருத்­து­வே­று­பா­டு­களைத் தீர்க்­க­மாக ஆராய்ந்து முடிவு செய்த பின் விரைவில் குழுவின் அங்­கத்­தி­னரை அழைத்துத் தெளி­வு­ப­டுத்தும் எனவும் கூறப்­பட்­டது. அப்­போது முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் 9 ஆண்­டுகள் கழிந்­து­விட்­டன.  இனியும் தாமதம் வேண்டாம். இந்த திருத்­தத்தைப் பாதிக்­கப்­பட்ட பெண்­களே கோரு­கிறோம். தொடர்ந்தும் இதில் இழு­பறி செய்­வது கூடாது எனக் கூறி­னார்கள்.
மனு நீதிக்குப் புறம்­பான எந்த சட்­டமும் இல்­லாமல் ஒரு பெண் இல்­லற வாழ்­வுக்குத் தகு­தி­யாக வேண்­டு­மெனில் அறிவு வளர்ச்­சியும் உடல் வலுவும் கண்­டிப்­பாகும். பூப்­பெய்தி விட்டாள் என்­ப­தற்­காக சிறு­மி­களை இல்­ல­றத்தில் ஈடு­ப­டுத்­தினால் நிலைமை என்ன? குடும்பப் பொறுப்பும் இல்லா தலை­மு­றை­களும் எவை என அவள் அறிந்து செயற்­ப­டு­வாளா? வளர்ந்­தோரே இவற்றில் தவறு விடு­கையில் இந்த இள­சு­களின் நிலை என்ன? சிசு உரு­வாக்கம், சுகப் பிர­சவம், பிள்ளை  வளர்ப்பு, பால் கொடுப்பு ஆகி­ய­வற்­றுக்குப் போதிய உடல் வலு வேண்­டுமே. இத்­த­கைய பிளளைத் தாய்கள் மூலம் சிலர் பல பிள்­ளை­க­ளுக்கும் தந்­தை­க­ளாகி விடு­கி­றார்கள். அவற்றில் சில குழந்­தைகள் நோஞ்­சான்­க­ளாகி விடு­கின்­றன. ஆக பிஞ்சுக் கன்­னி­க­ளுக்கு கல்­வியும் இடையில்  தடைப்­ப­டு­கி­றது. வீட்டின் அன்­றாட காரி­யங்­க­ளையும் முழு­மை­யாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமை­வ­தில்லை. அடிக்­கடி குழந்­தைகள் கிடைக்­கு­மாயின் விரை­வா­கவே அவர்கள் நலிந்து நடை­மெ­லிந்து முதி­ய­வரைப் போல் இளைத்தும் விடு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு வாழ்க்­கையில் எந்த சுயா­தீ­னமும் கிடை­யாது. பிள்­ளை­களை வளர்த்து ஆளாக்கி விடு­வ­துடன் அவர்­களின் வாழ்­நாளும் கழிந்­து­விடும். மோகத்தைத் தணித்து சந்­த­தியை ஈன்று தரும் இயந்­திரம் என்றே பலர் பெண்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். மனி­தனில் பெண் பாதி எனும் வகையில் அவள் சம உரி­மைக்கு உரித்­து­டைய வளாவாள். அந்த வகையில் ஆணா­திக்­கத்தை இஸ்லாம் ஏற்­றுக்­கொள்­ளாது என்­பது இன்­னுமா புரி­ய­வில்லை.
கடந்த கால ஆலிம்­களும் முன்­னோர்­களும் விட்ட தவ­று­க­ளால்தான் பெண்­ணுக்குத் தாப­ரிப்பைப் பிச்­சை­போல கொடுப்­பதும் அற்ப தொகையைக்  கொடுப்­பதும் கொடுக்­கா­தி­ருப்­பதும் அண்­மைக்­காலம் வரை நிகழ்ந்தே வரு­கின்­றன. விவா­கத்­துக்கோ விவா­க­ரத்­துக்கோ பெண்ணின் அனு­மதி தேவை­யில்லை. எனும் சிந்­த­னையும் இருந்தே வந்­தி­ருக்­கி­றது. சொற்ப மஹர் தொகையை மட்­டுமே பதிவில் எழுதி வந்­தி­ருக்­கி­றார்கள். சுளை­யாக வாங்கும் சீத­னத்தை மறை முக­மாவே எடுத்து வந்­தார்கள். இவைதாம் இத்­தனை காலமும் அமுலில் இருந்­தன. பெண்­ணுக்கும் சீத­னத்­துக்கும் பதிவு இல்லை. நபி (ஸல்) அவர்­களின்  காலத்தில் திரு­மணப் பதிவு நிகழ்ந்­த­தாக வர­லாறு இல்லை. நபி (ஸல்) ஆயிஷா நாய­கியை திரு­மணம் புரி­கின்­ற­போது ஆயிஷா நாயகி வளர்ந்த ஒரு சிறுமி. நபி (ஸல்) அவர்­களின் காலத்­திலோ அதற்குப் பிறகோ பெண்கள் காதி­யா­ராக இருந்­த­தற்கும் வர­லாறு இல்லை. இவை மூன்றும் உலமா சபையின் விடாப்­பி­டிக்குக் காரணம் என நான் நினைக்­கிறேன்.
பதிவு அப்­போது நிக­ழ­வில்லை என்­ப­தற்­காக இப்­போதும் அது கூடாது எனக் கூற முடி­யுமா? ஏனெனில் கூடாது என எங்கும் கூறப்­ப­ட­வில்லை திரு­ம­ணத்­துக்கு வய­தெல்லை இல்லை எனும் நிலை அன்று காணப்­பட்­டதால் தற்­போ­தைய சூழலில் வய­தெல்லை விதிப்­பது இஸ்­லாத்­துக்கு முர­ணா­கி­வி­டுமா? அப்­போது பெண் காதி இல்லை என்­ப­தற்­காக எப்­போ­துமே அது கூடாது என்­பதா? நபி (ஸல்) அவர்­களின் காலத்தில் நிக­ழா­த­வையும் குர்­ஆனும் ஹதீஸும் நேர­டி­யாக ஏற்றுக் கொள்­ளா­த­வையும் கூட கால­மாற்­றத்தின்  அவ­சிய தேவை­யைக்­க­ருதி இஜ்­திஹாத் மூலம் அமு­லா­கு­வது தெரி­யாதா. உலமா சபை தலைவர் பின்­வரும் உபா­யங்­க­ளையும் கையாள்­கின்றார்.
1)            21 முஸ்லிம் எம். பிக்­க­ளி­டமும் வழங்­கு­மாறு கூறினார்.
2)            முஸ்­லிம்­க­ளிடம் மக்கள் அபிப்­பி­ரா­யத்தைக் கோரு­மாறு கூறினார்.
3)            3 முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிக்­கு­மாறு கூறினார்.
இப்­போது தனது நண்­ப­ரான முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட வின் தயவை நாடி நிற்­கிறார். அவரை இவர் தனது உலமா சபை தலை­மை­ய­கத்­துக்கு அழைப்­பித்து விப­ரத்தைக் கூறி­யி­ருக்­கிறார். மிலிந்த  மொர­கொட அங்கு பேசு­கையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது இதில் மாற்­றங்கள் தேவை என நீண்ட கால­மாக கோரப்­பட்­டி­ருந்­தது. எனவே நான் நீதி­ய­மைச்­ச­ராக இருக்­கையில் இதற்­கென ஒரு குழுவை நிய­மித்­தி­ருந்தேன். அம் முயற்சி பயன்­தர வேண்டும் என எதிர்­பார்க்­கிறேன் என்றார். அப்­போது இவர் தெரிவுக் குழுவை நிய­மிக்­கையில் பாயிஸ் முஸ்­த­பா­வையே தலைமை வகிக்க அழைத்­த­தா­கவும் எனினும் பாயிஸ் முஸ்­தபா பெருந்­தன்­மை­யோடு சலீம் மர்­சூபை சிபா­ரிசு செய்­த­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார். சன்­மார்க்க விட­யங்­களை ஆராய்ந்து தீர்­வு­காணும் அறிவும் திற­மையும் ஆலிம்­க­ளுக்கே உள்­ளதால் அவர்­களின் கருத்­துக்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கை­யையே கவ­னத்தில் கொள்­ளப்ப வேண்டும். அதற்­கென நானே ரிஸ்வி முப்­தி­யையும் முபாரக் மௌல­வி­யையும் நிய­மித்தேன். என்றும் அவர் கூறி­யுள்ளார். ஆக பக்க சார்பு நிலைப்­பாட்­டுக்­கா­கவே இந்த சந்­திப்பு நிகழ்ந்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது.
இதில் ஒரு வேடிக்கை என்­ன­வென்றால் மிலிந்­த­மொ­ர­கொட அப்­போது புதி­யதோர் தலை­மு­றைக்­கான நவீன சிந்­தனை எனும் நிகழ்ச்சி நிர­லுக்­கான தக­வல்­களை ரிஸ்வி முப்­தி­யி­டமும் முபாரக் மௌல­வி­யி­டமும் வழங்­கி­ய­தே­யாகும். இஸ்லாம் எல்லா காலங்­க­ளுக்கும் பொருத்­த­மா­ன­தாகும். புதிய தலை­மு­றைக்­கென நவீன சிந்­தனை என்­பது இஸ்­லாத்­துக்குப் பொருந்­தாது காரணம் இஜ்மாஃ கியாஸ், இஜ்­திஹாத் என்­பவை இருப்­பதால் புது விளக்­கங்­களைப் பெற்றால் உரிய தீர்வு கிடைத்­து­விடும் எதற்­கும்­ தீர்வு இஸ்­லாத்தில் இல்­லா­ம­லில்லை.
நாட்டின் சம பிர­ஜை­க­ளான பெண்­களைப் புறக்­க­ணித்து சட்­டங்­களைத் திணிக்க முடி­யுமா? உல­மா­ச­பை­யுடன் பேசு­வதில் பய­னில்லை. பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளு­ட­னேயே பேச வேண்டும் எனக் கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களின் முக்கிய மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள உலமா சபை ஏன் மறுக்கிறது? திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படத் தானே வேண்டும்? ஈஜாப்  கபூல் ஒரு வலி இரு சாட்சி மஹர் என மட்டுந்தான் 100 ஆண்டுகளுக்கு முன்  லெப்பை மார் வலியுறுத்தினர். அதன் பிறகே  "கடுத்தம்" எனும் திருமணப் பதிவை அப்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெற்றுத் தந்தனர்.
எனவே சட்டபூர்வமான திருமணப் பதிவு. தேவையில்லை எனக் கூற எவராலும் முடியாது. பலதார முறையை சுய நோக்கத்துக்கு ஆக்கிக்கொண்டு சில ஆண்கள் எந்த பதிவும் இல்லாமல் இஸ்லாத்தில் பதிவு கடமையல்ல  எனக் கூறிவிடுகிறார்கள். விரும்பிய பெண்ணை வாய்மொழி மூலம் முடிக்கிறார்கள். வாய் மொழி மூலம் விடுகிறார்கள். இதனால் பெண்ணுக்கு  சொத்துரிமை எனும் பேச்சுக்கே இடமில்லை. பிள்ளைகளுக்கு வாரிசுரிமை கிடைக்குமா? அரச ஆவணங்களில் இவர்தான் எனது கணவர் என அவள் எப்படி உரிமை பாராட்டுவாள்? அவள் அவனால்  கைவிடப்பட்டதும் தாபரிப்பு பெறுவது எப்படி? பிள்ளைகளின் எதிர்கால வாழ்வாதாரங்களுக்கு வழி என்ன? எனவே சட்டபூர்வமான திருமணப் பதிவைத் தடுக்க யாருக்கும் நியாயாதிக்கம் இல்லை.  இதில் பெண்ணுரிமை மட்டுமல்ல மனித உரிமையே மீறப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Comments