தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஞாயிறு நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்


மேல் மாகாண பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை தனியார் பஸ் வண்­டி­க­ளுக்­கான பய­ண­வழி அனு­ம­திப்­பத்­திரம் (Route Permit) வழங்­கு­வ­தற்கு டென்டர் வழி­மு­றையைக் கடைப்­பி­டிக்க நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுத்து வரு­வதை எதிர்த்து அகில இலங்கை தனியார் பஸ் உரி­மை­யாளர் சங்கம் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் வேலை நிறுத்­தத்தில் ஈடு­படத் தீர்­மா­னித்­துள்­ளது.
இந்த வேலை நிறுத்­தப்­போ­ராட்டம் அகில இலங்கை ரீதியில் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அகில இலங்கை தனியார் பஸ் உரி­மை­யாளர் சங்­கத்தின் செய­லாளர் அஞ்­சன பிரி­யன்சித் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அஞ்­சன பிரி­யன்சிங் தெரி­விக்­கையில்;
‘தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழுவும் மேல் மாகாண பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­ச­பையும் இணைந்து பஸ்­வண்டி பய­ண­வழி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கு­வ­தற்கு கேள்­விப்­பத்­திர (டென்டர்) வழி­மு­றை­யொன்­றினைக் கையாள்­வ­தற்கு முயற்­சித்து வரு­கி­றது.
தற்­போது பஸ்­வண்டி பய­ண­வழி அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் குறிப்­பிட்ட சில பயண வழி­க­ளுக்கு மாத்­தி­ரமே டென்டர் மூலம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.
டென்டர் வழி­முறை பின்­பற்­றப்­ப­டு­வதன் மூலம் மாத்­தறை– கொழும்பு அதி­வேக பாதை வழிக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கு­வதன் மூலம் தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு 400 மில்­லியன் ரூபாவை சம்­பா­தித்துக் கொள்­கி­றது. அத்­தோடு மேல் மாகாண போக்­கு­வ­ரத்துச் சபை 450 மில்­லியன் ரூபாவைப் பெற்­றுக்­கொள்­கி­றது என்றார்.
மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில்;
‘தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு கேள்­விப்­பத்­திரம் கோராமல் பய­ண­வழி அனு­ம­திப்­பத்­திரம் வழங்க வேண்டும். இந்த நடை­மு­றையே கடந்த 15 வரு­டங்­க­ளாகப் பின்­பற்­றப்­பட்டு வரு­கி­றது. எனவே தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு கேள்­விப்­பத்­திரம் கோரி பஸ் பயணவழி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றார்.
x

Comments