முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத தடை !
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காலி துண்டுவ முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவிகள் பெந்தோட்டையில் உள்ள பெரும்பான்மை பரீட்சை நிலையம் ஒன்றில் பரீட்சை எழுத சென்றுள்ளனனர். நேற்றைய தினம் குறித்த மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பர்தா அணிந்து பரீட்சை எழுத தடை விதிக்கப்பட்ட அதேவேளை இன்று குறித்த முஸ்லிம் மாணவிகளின் தலையை மறைத்து பரீட்சை எழுதவும் முற்றுமுழுதாக தடை விதிக்கபட்டுள்ளது.
ஹபீஸ் மரிக்கார்

Comments
Post a Comment